Subbiahpatturajan
#cinartamilan #whereisthishabit
விருப்பமே இல்லாவிட்டாலும் கூட...
விழிப்புடன் இருந்தால் வாழ்வு உயரும்
எண்ணங்களின் பிறப்பிடம் மனம்
மனதின் இயக்கத்தை "எண்ணம்' என்ற சொல்லால் குறிக்கிறோம்..
எண்ண ஓட்டத்தை உணர்ந்து
விழிப்புடன் இருந்தால் வாழ்வு உயரும்..
மனதை அறியாமல் அதன் போக்கிற்கு விட்டு விட்டால் வாழ்க்கை தாழ்வடையும்..
எண்ணத்தின் சக்தி அளப்பரியது..
அது எங்கும் செல்லும் வலிமை கொண்டது..
விழிப்பு நிலையில் இல்லாமல் அலட்சியமாக இருந்தால்,
தீய எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கும்..
தவறான எண்ணங்களில் இருந்து தப்பிக்க ஒரே வழி எப்போதுமே
மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவதைத் தவிர வேறில்லை..
விருப்பமே இல்லாவிட்டாலும் கூட
நல்ல விஷயங்களை மட்டும் நாடுங்கள், நல்லவர்களோடு மட்டுமே நாம் பொழுதைக் கழிக்க வேண்டும்..
எண்ணங்களை கையாளத் தொடங்கி விட்டால்,
எல்லாமே இன்பமயம் தான்..
பூரணமான அமைதி நிலை பெற்ற மனதில்
ஆனந்தம் நிலைத்து நிற்கும்..
எண்ணமே நம் வாழ்வைச் செதுக்கும் சிற்பி..
எண்ணங்களைப் பொறுத்தே நம் சொற்கள், செயல்கள் அமைகின்றன..
எண்ணமும், சொல்லும் ஒன்றுபடும்போது செயல்களும் உயர்ந்தவையாக அமைந்து விடும்..
எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் எப்போதும் ஒரேமாதிரி இருக்க வேண்டும்.
கருத்துகள்