Why is not the development of industry in Kerala ... Reason... கேரளாவில் ஏன் தொழில்வளர்ச்சி இல்லை... காரணம்...?
Subbiahpatturajan
ஒருவர் அந்த மாநிலத்திற்கு வேறொரு மாநிலத்தில் இருந்து வேலை காரணமாக அல்லது வேறு எதோ காரணங்களுக்காக இடம் பெயர்வு செய்கிறார் , என்று வைத்துக் கொள்ளுங்கள் ...
அதற்காக புது வீட்டிற்கு குடி போகையில் சாமான் செட் எடுத்து கொண்டு சென்று லாரியில் இருந்து இறக்க வேண்டிய சமயம், நீங்கள் door to door லாரி booking செய்து இருந்தாலும், ....
லோக்கல் பாரம் ஏற்றி இறக்கும் சங்க உறுப்பினர்களுக்கு நோக்கு கூலி என்று தரவேண்டும். அதாவது அவர்கள் வேலை செய்யா விட்டாலும் கூட அந்த கூலியை தரவேண்டும் என்பது கட்டாயம்..
இதில் என்ன வேடிக்கை என்றால், கேரள உயர்நீதிமன்றம் இந்த கொடிய பழக்கத்தை ஒழிக்க தீர்ப்பு அளித்தும் கூட, தற்போதைய அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
தனி ஆட்களை விடுங்கள். மத்திய அரசு நிறுவனமான இஸ்ரோ வுகும் அதே நிலைதான். என்ன கேரளா மாடலோ?
இதுபோன்ற ஒரு எச்சகலை பழக்கம் எந்த ஒரு மாநிலத்தில் கிடையாது.
நம் பொருள்களை நாமே சுமந்து கொள்ளும் நிலையில் இருந்தாலும் இந்த கம்மி யூனியன் ரவுடிகளுக்கு வாக்யரிசி கொடுக்க வேண்டும்.
கோயம்புத்தூரில் இருந்து பாலக்காட்டுக்குகோத்ரேஜ் பீரோ அனுப்பினார்கள். அதை லாரியில் இருந்து கீழே இறக்கி வீட்டின் முதல் மாடியில் கொண்டு செல்வதற்கு இவர்கள் கேட்ட கூலி புதிய காட்ரேஜ் பீரோ வை விட அதிகமாக இருந்தது!
இப்போது தெரிகிறதா ... கேரளாவில் ஏன் தொழில்வளர்ச்சி இல்லை என்று?
கருத்துகள்