முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டால் எந்த துன்பத்திற்கும் அவசியமே இல்லை...!

Subbiahpatturajan


இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டால் எந்த துன்பத்திற்கும் அவசியமே இல்லை...!


*''துயரினைக் களையுங்கள்...!"*    
துயரற்ற மனிதன் என உலகில் எவரும் இல்லை. இந்தத் துயரம் என்பது ஒரு மனிதனுக்கு புற்று நோயை போன்றது...

புற்று நோய் கிருமிகள் எப்படி உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கு விரைவாக பரவுகின்றதோ அதைப் போன்று, துயரென்பது ஒரு துயரம் மற்றொரு துயரினை ஆட்கொள்ளும் சக்தியைக் கொண்டது. 'தலை வலி போய் திருகு வலி வந்த கதையாக...'

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு துயரம் இருக்கத்தான் செய்கிறது...

ஒரு சிலர் துயரினை மட்டுமே நினைத்து வாழ்க்கையில் உள்ள இன்பங்களை இழந்து கொண்டு இருக்கிறார்கள். துயரங்களை கனமாக தாங்கிக்கொண்டு, நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை...

துன்பங்களை நம்முடைய மனத்திற்குள் புகுத்தி வைக்க, வைக்க அதன் அழுத்தம் பல மடங்கு மிகுதியாகி விடும்.
அதனால் தான் மனிதர்களுக்கு ஹாட்அட்டாக் போன்ற நோய்கள் மன அழுத்தம் காரணமாக வருகின்றன. இதனால் விளையும் துயரினால் மனச் சோர்வும், மனச்சோர்வினால் மேலும் துயரங்களும் ஏற்படலாம்...,

எதற்கு, எது காரணம் என்கிற ஆராய்ச்சியை விட்டுவிட்டு
இரண்டிலிருந்தும் விலகி நின்று, வாழ்க்கைச் சிக்கல்களை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம்...

மாபெறும் தலைவர் 'வின்ஸ்டன் சர்ச்சில்' அவர்கள் ஒருமுறை ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது, துயர்கொள்ள எனக்கு நேரம் இல்லை என்றார்...

இதை கேட்டது ஒரு நிருபர். அந்த நிருபருக்கு ஒரே வியப்பு!. என்ன இது துயரியில்லாத ஒரு மனிதனா...? அல்லது அத் துயரினை தாம் உணர நேரம் இல்லை என்று கூறும் ஒரு மனிதனா...? என்று வியந்தார்...

வின்ஸ்டன் சர்ச்சில் அதற்கு கூறிய விளக்கம்,
''நான் நாளும் 18 மணி நேரம் வேலை செய்கிறேன், அதனால் எனக்கு துயர்கொள்வதற்கு நேரம் இல்லை என்று கூறினார். உண்மையிலேயே நல்ல பதில் மற்றும் உண்மையும் கூட...

கோடி கோடியாக சொத்து இருக்கலாம். பெரிய பெரிய மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவதற்கு வசதி இருக்கலாம். திறமையான மருத்துவர்களால வேண்டுமானால் இறப்பினை தள்ளிப் போடலாம். ஆனால்! ஒருநாள் இந்த உயிர் போகத்தான் போகின்றது...

அப்போது யாராலும் போகின்ற உயிரை தடுத்து நிறுத்த முடியாது. அதுதான் வாழ்க்கையின் நியதி...!

இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டால் எதற்கும் துன்புறுவதற்கு அவசியமே இல்லை...!

*எதுவுமே நிலைமாறாது இருக்கின்றபோது, உங்கள் துயரம் மட்டும் எப்படி நிலைமாறும்...?!*
*துயரினைக் களையுங்கள், மகிழ்வுடன் எப்போதும் இருங்கள்...!!*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...