முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரியார் இல்லையென்றால்...என்ன ஆகியிருக்கும்... என்பவர்களுக்கு...

Subbiahpatturajan

 #பெரியார் #குலக்கல்வி #cinartamilan
அன்று நமக்கு கல்வி மறுக்கப்பட்டது...
பெரியார் படிக்க வைத்தார், அய்யகோ அவர் இல்லையென்றால்...என்னாகியிருக்கும் என்றொரு கூட்டம் கிளம்பிவிட்டது

அன்றைய கல்வி முறை எப்படி இருந்தது, அட இந்தியாவில் அல்ல உலகிலே அன்று விஞ்ஞான கல்வி என எதுவுமில்லை

இந்தியாவில் வெள்ளையன் காலம் வருவதற்கு முன்பு உலகில் என்ன கல்வி இருந்தது? குருகுல கல்வியும் இன்னும் சில வாழ்க்கை கல்வியும் இருந்தது

இந்தியா மட்டுமல்ல உலகெல்லாம் அதுவே இருந்தது

நாளந்தா எல்லாம் மிக பழமையானது, அதன் காலம் தொன்மையானது, அதிலும் பாருங்கள் எங்கிருந்தோ வந்த யுவான் சுவாங் கற்றானாம்

ஆனால் இங்கிருப்பவர்களை பிராமணர் கற்க விடவில்லையாம், நம்பி கொள்ளுங்கள்

வாழ்க்கைக்கு தேவையான கல்விகள் குரு ஒருவரிடமிருந்து கற்கபட்டது, அது விவசாயமோ, சிற்பமோ, நகை தொழிலோ, எதுவோ வாழ்கைக்கு தேவையானதை மட்டும் கற்றார்கள், கசடற கற்றார்கள்.

அரச‌ வர்கத்திற்கு மட்டும் சில சிறப்பு கல்விகள் தரபட்டன , அதுவும் பரம்பரை பரம்பரையாக வந்ததே தவிர புதிதாக ஏதுமல்ல‌

அதுவும் ராஜநீதி, போர்வியூகம், ஆட்சிமுறை, வரி வசூல் என்றே இருந்தது

மற்றபடி வாழ்க்கைக்கான கல்விகள் எல்லோருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்றபடி இருந்தது
இதில் பிராமணரின் பங்கு பஞ்சாங்கம் பார்ப்பது உட்பட சில, அதில் ஆலயபணிகள் இருந்தன.

புத்த சமயமும், சமண மதமும், ஆதீனங்களும் இங்கு கல்வி பணி செய்யத்தான் செய்தன, மறுக்க முடியாது, எழுத வாசிக்க கூட்டல் கழித்தல் கொஞ்சம் நீதி நெறிகள் வாழ்க்கைக்கான தத்துவங்கள்

இதில் சில தற்காப்பு பயிற்சியும் கை மருத்துவமும் உண்டென்கின்றார்கள், உடற்பயிற்சி முதல் ஓவிய பயிற்சி,ஓலை சுவடி படிப்பது வரை சொல்லி கொடுத்தார்கள்

யானை, மாடு,குதிரை போன்ற விலங்குகளை பழக்குவது எப்படி பயன்படுத்துவது எப்படி என போதிக்கபட்டது
அக்காலத்தில் விரும்பிய கலையினை படிக்கும் வாய்ப்பு இருந்தது , யாருக்கும் மறுக்கபடவில்லை

எழுதபடிக்க விரும்பியவர்கள் படித்தார்கள், குறிப்பாக வியாபாரத்தில் இருந்த செட்டி சமூகம் அப்பொழுதே கணக்குகளை கற்பதை வழக்கமாக வைத்திருந்தது

மருத்துவச்சி கூட எல்லா சாதியிலும் இருந்தார், நாட்டு வைத்தியர்கள் கூட தங்கள் கலையினை இன்னொருவருக்கு கற்றுகொடுத்தே வளர்த்தனர்

ஆம் உலோக அறிவு, விவசாய அறிவு, கற்களை வெட்டும் நுட்பம், மிருகங்களை பயன்படுத்தும் அறிவு, காலநிலை பற்றிய அறிவு, மண் அறிவு, நீர் மேலாண்மை அறிவு போன்ற வாழ்க்கைக்கு தேவையான கல்வியும் அறிவும் அன்றே இருந்தது

எல்லா வகை உலோகங்களை உருக்கும் கலையும், மூலிகைகளை பயன்படுத்தும் வித்தையும் இங்கு அத்துபடியாக இருந்திருக்கின்றது

அந்த இந்திய சமூகம் உலகின் பணக்கார சமூகமாக இருந்தது

ஆம் அவர்கள் அதிகம் எல்லாமும் படிக்கவில்லை, ஆனால் அவரவருக்கு என்ன வேண்டுமோ அதை நன்கு கற்று தொழிலை நன்கு செய்தார்கள்

நாடு நன்றாய் இருந்தது, செல்வத்தில் திளைத்தது, அறிவில்லா, கல்வியில்லா கூட்டமெனில் அது எப்படி சாத்தியம்?

அலெக்ஸாண்டர் முதல் கோரி, கஜினி ஏன் ராப்ர்ட் கிளைவ் வரை இந்நாட்டின் வளத்தை தேடித்தான் வந்தார்கள்

இங்கு வாழ்க்கை கல்வியே பிராதனமாய் இருந்தது, உலக சிந்தனை மாற, நவீன பாடங்கள் வர வர, காலம் மாற மாற பள்ளிகளை வெள்ளையன் தொடங்கினான்

அதன் பின் இப்பொழுது காணும் பள்ளிகள் வந்தன‌

ஏதோ 16ம் நூற்றாண்டு வரை இங்கு ஐன்ஸ்டீனின் தியரியும், ஏரோ நாட்டிக்கல் கல்வியும், இன்னும் நவீன கல்வியும் இருந்தது போலவும், அன்றே டாக்டர்கள ஸ்தெஸ்கோப்போடு அலைந்தது போலவும்

அதை எல்லாம் பிராமணர் செய்து மற்றவர்களை அடிமை படுத்தியது போலவும் இங்கு ஏகபட்ட கட்டுகதைகள்
ஒரு மண்ணாங்கட்டியுமில்லை அன்றிருந்த வாழ்க்கைக்கான கல்வி எல்லோருக்கும் கிடைத்தது

பிராமண சமூகம் ஆலயங்களையும் அரசனையும் நம்பி வாழ்ந்த ஒரு பிச்சைக்கார சமூகமாகவே இருந்தது
ஆம் ஒரு மன்னனை பிராமணன் என காட்ட முடியுமா? ஒரு ஜமீனை பிராமணன் என காட்டமுடியுமா?
நிச்சயம் முடியாது

அது அரசனுக்கு அடிமையாக இருந்தது அந்த கூட்டம், அரசன் பஞ்சாங்கம் கேட்டால் கொடுக்க வேண்டும், அவன் ஆலோசனை கேட்டால் சொல்ல வேண்டும்

அவன் களைத்திருந்தால் ஆடல் பாடல் என உற்சாக படுத்த வெண்டும், அதற்கான கலைகளை கற்றிருக்க வேண்டும்

(சங்கீதமும், ஆடல் பாடல் கலைகளும், இசை கருவி கலைகளிலும் அவர்கள் வித்தகர் ஆனது இப்படித்தான், அரசனுக்காகத்தான் )

அப்படியே 4 பாடலையும் பாட வேண்டும், அவனுக்கும் ஆண்டவனுக்கும்

ஆம் அரசனை சுற்றியே, அவனை அண்டி பிழைத்தே அவர்கள் வாழ்வு இருந்தது

அக்கால மன்னர்கள் பக்தி மிக்கவர்கள் என்பதால் ஆலயத்தில் அவர்களையே அமர்த்தினான், அது அரச முடிவு
ஆலயத்திற்கும் அரசனுக்கும் அடிமை கூட்டமாகவே பிராமண சமூகம் இருந்தது, அவர்களுக்கும் ஒரு மண்ணாங்கட்டி உரிமையுமில்லை

அவர்களுக்கு நிலபுலனோ பெரும் ஆட்சி அதிகாரமோ இல்லை

மன்னர்கள் சரிய, ஆலயங்களும் சரிய அந்த இனம் வெள்ளையனிடம் ஒட்டிகொண்டது
அப்பொழுதும் அவர்கள் ஆங்கிலம் கற்று வெள்ளையன் அரசில் வேலையாட்களாக இருந்தார்களே தவிர வேறொன்றுமில்லை

முதலில் மன்னன் சொன்னதை செய்தவர்கள், வெள்ளையன் சொன்னதையே செய்தார்கள்
இந்த மனுநீதி மண்ணாங்கட்டி எல்லாம் என்றோ காலாவதியானவை, இங்கு நடந்தது பலமாதிரியான ஆட்சி கடைசியாக பிரிட்டன் ஆட்சி

இதில் மனுநீதி எங்கிருந்து ஆண்டது?

அதுவும் இந்தியாவில் சுல்தான்கள் ஆட்சி வந்தபின் ஆலயங்களை தவிர பிராமணருக்கு வேறு இடம் இல்லை என்ற அவல நிலை வந்தபின் எங்கிருந்து மனுநீதி ஆளும்?

பிராமணன் ஒரு காலமும் ஆளவில்லை, உண்மையில் மக்களை சாதிவாரியாக பிரித்தாண்டது ராஜ தந்திரம்

ஆம், பிரித்தாளும் சூழ்ச்சியினை பிரிட்டானியருக்கு சொல்லி கொடுத்ததே இந்திய ராஜநீதி, அன்றிருந்த அமைப்பு

மக்களை ஒன்றுசேர விட கூடாது, அது ஆட்சிக்கு ஆபத்து ஒவ்வொரு தொழிலாக பிரித்து கொடுத்து உழைக்க சொல்லிகொண்டே இரு, அதில் வேறுபாடுகள் வந்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒருவகை ஆளும் தந்திரம்

அதை அன்றே அரசர்கள் செய்தார்கள், ஆனால் குடிமக்களுக்கு ஆபத்து என்றால் காக்க தவறவில்லை
உண்மையில் ராஜநீதியே, அவர்களின் அணுகுமுறையே சாதிய சிக்கலுக்கு அடிப்படை
அந்த அரச நீதியியே பின்னாளில் பிராமணர் மேல் பழியாய் விடிந்தது, சாதி பிராமணர் உருவாக்கி பின்பற்றியது என பழிசுமக்க வைத்தது

தனக்கு அடிமையான பிராமண சமூகம் உருவாக்கிய சாதியினை மன்னன் ஏற்பானா? நொடியில் களைந்திருக்கமாட்டானா?

ஏன் களையவில்லை?

அது தனக்கும் தன் ஆட்சிக்கும் சாதகம் என கண்டான், அப்படியே விட்டுவிட்டான், சாதி ஒழித்த ஒரு மன்னன் உண்டா?

இந்து மன்னரை விடுங்கள், இஸ்லாமிய மன்னர்களே செய்யவில்லையே ஏன்? அவன் நினைத்தால் நொடியில் ஒழிக்க முடியாதா? ஆனால் ஏன் செய்யவில்லை

ஏன்? சாதியினை உருவாக்கி பலனடைந்தது அவர்களே, சாட்சாத் அவர்களே பின் எப்படி களைவார்கள்??
ஆக அரசனிடம் அண்டி பிழைத்து அப்படியே வெள்ளையனிடம் பணிசெய்ததே பிராமண இனம் எனும் மைனாரிட்டி இனம்

அவர்களை குறிவைத்துதான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும் அரசியலும் சில சமூகங்களுக்குள்ள கட்டுபாடுகளும் சில பழக்கவழகங்களும் அவர்களுக்கு இருந்திருக்கலாம்

அது எல்லா இனங்களுக்குமானது, பிராமணருக்கு மட்டுமல்ல, எல்லா இனங்களிலும் சில தனித்துவ பழக்கங்கள் உண்டு

மற்றபடி அவர்கள் யாரின் வாழ்வினை கெடுக்கவுமில்லை, யார் கல்வியினையும் தடுக்கவுமில்லை.
கிளப்பிவிடபடும் கதைகளும், படுபயங்கர வரலாற்று திரிபுகளும் எல்லாமே அரசியல், அதை தவிர வேறொன்றுமில்லை

உண்மையில் சாதிகள் அரசனால் அன்று அங்கீகரிக்கபட்டன, அதில் சில அனுகூலம் இருப்பதை தெரிந்த மன்னன் அப்படியே ஏற்றுகொண்டான்

அதுவே ராஜ்நீதி, நாட்டுக்கும் அரசனுக்கும் நல்லது என அக்காலமும் ஒப்பும் கொண்டது

சாதியில் ஏற்றதாழ்வு இல்லை , பள்ளிவகுப்பில் பிரிவுகள் இருப்பது போல வாழ்வியல் பிரிவாக அது இருந்தது

அதை இஸ்லாமிய சுல்தானும் மாற்றவில்லை,, ஆங்கில பிரெஞ்ச் ஆட்சியாளரும் மாற்றவில்லை
ஆம் அவர்களுக்கு அனுகூலமிருந்தது, ஆளும் வர்க்கத்திற்கு சாதி வேற்றுமை எந்நாளும் அவசியம் எனும் தந்திரம் இருந்தது

அந்த ராஜநீதியினைத்தான் அவனை அண்டி இருந்த பாவத்திற்காக பிராமண சமூகம் சுமந்து தொலைத்தது.
அன்று மன்னர்கள் காட்டிய அதே வழியினைத்தான் , அதே வகையில்தான் இன்றைய அரசியல்வாதிகளும் அதே சாதியில் அயோக்கிய அரசியல் செய்கின்றனர்

பெண்ணடிமை என்பதும் இந்துமதத்தில் இல்லை

பெண்ணை தெய்வமாக வழிபட்டது முதல் சுயம்வரம் வரை பெண்ணை அனுமதித்த பூமி இது, இன்றும் பெண்கள் ஆலயம் செல்ல உடை கட்டுபாடோ இறுக்கமோ சொல்லா பூமி இது

இடையில் ஆப்கானிய கொள்ளையர்களிடம் இருந்து பெண்களை காக்க செய்யபட்ட ஏற்பாடே பெண்ணடிமை என திரிந்தது, அதுவும் 18ம் நூற்றாண்டில் மாறிற்று

இதில் ராம்சாமி கிழித்தது ஏதுமில்லை, மணியம்மையினை எத்தனை பட்டம் பெறவைத்தார் ராம்சாமி என்பதிலே விஷயம் உண்டு, ஆம் அந்த பெண்ணை தன் வேலைக்காரிபோலவே ராம்சாமி வைத்திருந்தார்

பிராமணன் படிக்கவிடவில்லை, மற்ற சாதியினை பிழைக்க விடவில்லை என்பதே அபத்தம்

நாம் மறுபடி மறுபடி அழுத்தமாக சொல்கின்றோம், இங்கு நவீன கல்வியினை வெள்ளையன் காலத்தில்தான் உலகமே கண்டது அவன் அதை இங்கே  தொடங்கி வைத்தான்

அவன் கல்லூரியும் பள்ளிகளுமாக பெருக்கினான், அதில் மதமாற்றமும் இருந்தது சந்தேகமில்லை

ஆனால் இந்து அமைப்புகளும், வள்ளல்களும் , ஆதீனங்களும் சற்றும் பின் தங்காமல் பள்ளி கல்லூரிகளை தொடங்கின‌

ஏன் நாடார் போன்ற சில சாதிசங்களளே பள்ளிகள் அமைத்தன‌

இதில் வாத்தியார் உத்தியோகத்தில் இருந்த இனமே பிராமண இனம், அவர்கள் கூலிக்கு இருந்தார்களே தவிர நிறுவணம் அவர்களுடையது அல்ல‌

பிராமண சமூகம் நடத்தியதாக ஒரு பள்ளி கல்லூரியினை காட்ட முடியாது, அவர்கள் கூலிக்காரர்கள்
பின் எப்படி தாழ்த்தபட்டவன் படிப்பு பெற அவர்கள் தடையாக இருந்திருக்க முடியும்?

அன்று வறுமையும் அறியாமையும் சில சமூகங்களை பள்ளி பக்கமே அனுப்பவில்லை, அதற்கு காரணம் வறுமை அன்றி வேறல்ல‌

இங்கு கல்வி பெருகியதற்கு மெஷினரிகளும், இங்கிருந்த தனவான்களின் நன்கொடையில் உருவான பள்ளிகளும் காரணம் என சொன்னால் அது சரி

பின்னாளில் காமராஜர் பலத்த அஸ்திவாரமிட்டார் என்றால் அதுவும் சரி

மாறாக கூலிக்கு வேலை செய்த பிராமணர் கல்வி கொடுக்கவில்லை என்பதும், பெரியார் புரட்சியில் கல்விபெருகிற்று என்பதும் அப்பட்டமான அரசியலும் பொய்யும் ஆகும்

வரலாறு அதைத்தான் சொல்கின்றது

ராம்சாமி காலத்திலே பிடி பன்னீசெல்வம் வழகறிஞராகி இருகின்றார், லண்டன் வரை வட்டமேஜை மாநாடு எல்லாம் சென்றிருக்கின்றார், அவர் பிற்படுத்தபட்டவர்

இன்னும் பலர் இருந்திருக்கின்றனர், முத்துராமலிங்க தேவர் போன்றோருக்கு ஆங்கிலம் அனாசயாமக பேசும் அளவு பயிற்சி கொடுக்க பிராமண விற்பனர்கள் இருந்திருக்கின்றார்கள்

அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் எல்லாம் பட்டம் பெற முடிந்திருக்கின்றது

கலைஞர் 7ம் வகுப்பு வரை படித்து பெயிலாக முடிந்திருகின்றது, அவராலும் சினிமாவில் சம்பாதிக்க வழி இருந்திருக்கின்றது எந்த பிராமணனும் தடுக்கவில்லை

சரி, கோவில் அரசு வேலை கல்வி என கம்பு சுற்றிய ராம்சாமி ஏன் பண்ணை தொழிலாளிக்கும், ஆலை தொழிலாளிக்கும் கூலி பற்றி பேசவே இல்லை

காரணம் முதலாளிகளை ராம்சாமி எதிர்த்ததில்லை காரணம் அவருக்கே சொத்துக்களும் நிலமும் நிறைய இருந்தது

இதுதான் ராம்சாமியின் உண்மை முகம், "தொழிலாளர் சம்பளம் உயர்ந்தால் விலைவாசி உயரும்" என அறிய பொருளாதார தத்துவம் அவரிடம் இருந்துதான் வந்தது

சரி, கடைசியாக ஒன்றை சொல்லாம்

பிராமணன் யாரையும் படிக்கவிடவில்லை என்றால் சுதந்திர இந்தியாவில் காமராஜர் பள்ளி தொடங்கும் பொழுது கூட ஏன் யாரும் வரவில்லை?

கஞ்சி ஊற்றி கல்வி கொடுக்கும் அளவு நிலமை ஏன் மோசமாக இருந்தது?

ஆம், இங்கே வறுமையும் பொருளாதாரமே சிக்கலாக இருந்தது. அது 18ம் நூற்றாண்டிலே தொடங்கி இருந்தது, வெள்ளையன் இந்திய நிலையினை அப்படி வைத்திருந்தான்

அதை பற்றி பேசாமல் சும்மா பிராமணன் என கம்பு சுற்றிய ராம்சாமி , வெள்ளையனை கண்டிக்கா ராம்சாமி ஒரு அந்நிய கைகூலி என்பதை இதைவிட எப்படி புரிந்து கொள்ளமுடியும்?

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
இது திராவிட சதி வரலாறு மாற்றி அமைக்க பட்டு அது தமிழக பள்ளிக் கல்வித் துறையில் புகுத்தி பயிற்று விக்கப்பட்டு மூளை சலவை செய்து வைக்கப்பட்டது

Popular post

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்... ஆதலின் மாட்சியின் பெயோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. "யாதும் ஊரே யாவரும் கேளிர்...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்

மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ளவர்கள் கவனத்திற்கு...

Subbiahpatturajan மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமுள்ள பயணிகள் கவனத்திற்கு... இப்போது வனத்துறையினர் சார்பில் மாஞ்சோலை சென்று வர அனுமதி அளித்துள்ளனர் . விருப்பமுள்ளவர்கள் சென்று வரலாம். Manjolai நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ள மாஞ்சோலை எனும் சொர்க்க பூமியான கோடை வாஸ்தலம். சிறப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை. எப்படி போகலாம்? திருநெல்வேலியிலிருந்து 3 மணி நேரப் பயணம். கல்லிடைக்குறிச்சி , மணிமுத்தாறு அணை, Manimutharu அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம்.  அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகள

கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா?

Subbiahpatturajan உடல் நலம்.... கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் - நல்லதா? கெட்டதா? கடல் நீர் குளியல் மிக மிக நல்லது. கடல் நீரில் அயோடின், பொட்டாசியம், மக்னீசியம், குரோமியம் ஆகிய பயன்மிக்க பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளது. எனவே, கடல் நீரில் குளித்தால் பல நோய்கள் நீங்குகிறது. 1. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. 2. உடலில் வெப்ப நிலைக்கு சரியான வெப்பம் உள்ள கடல் நீரில் குளிப்பதால், கை, கால்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 3. உடல் தசைகள் உரிய அளவில்  சுருங்கி விரிகிறது. 4. அயோடின் நிறைந்த கடல் நீரில் குளிப்பதால் பெண்களின் மலட்டுத் தன்மை நீங்குகிறது, மகப்பேறு கிடைக்கும், சுகப்பிரசவத்திற்கு துணைபுரியும். 5. பொட்டாசியம் சிறுநீரை நன்கு வெளியேற்றும். 6. மக்னீசியம் தோல்நோய் மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுகிறது. 7. புரோமின் நரம்பு மண்டலத்தின் தளர்ச்சியை நீக்கி நல்ல ஓய்வு கொடுக்கும். 8  கால்சியம் உடலில் அனைத்து  வீக்கத்தை சரி செய்கிறது. 9. கடல்நீர் அனைத்துவகை அலர்ஜிகளையும் சரிசெய்கிறது. 10. கடல்நீர் எதிர்மறை சிந்தனை ( Negative ) உள்ளவர்களை நேர்மறை ( Positive ) சிந்தனை உள்ளவ

Did you know ...கேள்விக்குள் பதில்

Subbiahpatturajan #Didyouknow #Didyouknow உங்களால் கீழே உள்ள  எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறது என சோதிக்கலாமா? ஒரு வினாவிற்கு  10 இமைப்பொழுதுகள் மட்டுமே. 1. நியூமேரோ யூனோ என்றால் என்ன? 2. ஒரு டூயட்டில் எத்தனை பாடகர்கள்? 3. டேபிள் ஸ்பூன் எத்தனை டீஸ்பூன் ? 4. இந்து புராணங்களில் எத்தனை வேதங்கள் உள்ளன? 6. இந்தியாவை விட எத்தனை நாடுகளில் பெரிய பரப்பளவு உள்ளது? 7. நீரின் Ph மதிப்பு என்ன? 8. சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன? 10. எத்தனை மில்லிமீட்டர்கள் ஒரு சென்டிமீட்டரை உருவாக்குகின்றன? 11. ஒரு கால்பந்து அணியில் எத்தனை வீரர்கள் உள்ளனர்? 12. ஒரு அடி எத்தனை அங்குலங்கள்? 15. ஒரு முறை வாகன வரி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்? 16. விண்கல சேவலில் எத்தனை இறகுகள் உள்ளன? 17. இந்திய நாணயத்தில் எத்தனை மொழிகள் அச்சிடப்படுகின்றன? 18. மகாபாரதத்தில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன? 19. 2010 இல் இந்தியாவில் எத்தனையாவது காமன்வெல்த் விளையாட்டு நடத்தப்பட்டது? 20. டி -20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எத்தனை ஓவர்கள் உள்ளன? 21. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி எத்தனை ஆண்டுகள் கழித்தார்? 23. மனித உ

*குண்டக்க மண்டக்க : விளக்கம்*

Subbiahpatturajan *சூடு சொரனை* : இருந்தால்... விளக்கம்.... *🔷🔶இரட்டை சொற்களுக்கான விளக்கம்* .... *குண்டக்க மண்டக்க :* 🔸 *குண்டக்க* : இடுப்புப்பகுதி, 🔸 *மண்டக்க* : தலைப் பகுதி, சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்... *அந்தி, சந்தி:* 🔸 *அந்தி* : . மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.. 🔸 *சந்தி* : . இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.. *அக்குவேர்,ஆணிவேர்:* 🔸 *அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்.. 🔸 *ஆணி வேர்:* செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்... *அரை குறை:* 🔸 *அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.. 🔸 *குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது... *அக்கம், பக்கம்:* 🔸 *அக்கம்* : தன் வீடும், தான் இருக்கும் இடமும்... 🔸 *பக்கம்* : பக்தத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்... *கார சாரம் :* 🔸 *காரம்* : உறைப்பு சுவையுள்ளது... 🔸 *சாரம்* : காரம் சார்ந்த சுவையுள்ளது... *இச

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!?

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்...!!? அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம்...!! மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.....!! எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்...எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. ■ தேனீ,குளவிகொட்டியதற்கு.. தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்... ■ பூரான்கடிக்கு... பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு  3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்... ■ பூனை கடித்துவிட்டால்.. பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...

⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️

Subbiahpatturajan ✍🏻‌  ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூவின் நன்மைகள்* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ* *என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர சோம்பு கறிகள், மற்றும் பிரியாணி வகைகளில் பார்த்திருப்போம். இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருட்களில் இந்த அண்ணாச்சி பூவும் முக்கியமான ஒன்று. இதற்கு ‘அன்னாசி மொக்கு’, தக்கோலம், நட்சத்திர சோம்பு என்னும் வேறு சில பெயர்களும் உண்டு. இது வெறும் மணத்துக்காக மட்டுமல்லாமல் உணவை அழகுபடுத்துவதற்க்கும், மற்றும் மருந்தாகவும் பயன்படுகின்றது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *அண்ணாச்சி பூ பூர்வீகம்* *அண்ணாச்சி பூ சீனாவை பூர்வீகமாக கொண்டது. சீன ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அண்ணாச்சி பூவை பயன்படுத்தி வந்தார்கள். இது படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் பரவி சென்று இந்தியாவில் தற்போது இது ஒரு தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறி உள்ளது.* ⚙️⚙️⚙️⚙️⚙️⚙️ *நோய் எதிர்ப்பு சக்தி* *அதிகரிக்கும்* *அண்ணாச்சி பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.* *இதில் பாக்டீரியா வைரஸ், பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்களைக் கொல்லும் பய ஆக்டிவ் பொருட்கள் உள்ளது. இந்த எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் எந்த ஒரு தொற்றுக்கள

அரசு ஊழியர்கள் மாணவ மாணவிகள் கவனத்திற்கு...

Subbiahpatturajan அரசு ஊழியர்கள் மாணவ மாணவிகள் கவனத்திற்கு... *important modified govt G.o. s* தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள் (1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278) (2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975 ) (3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்- 27.9.1974 ) (4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, ந