முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நண்பகல் வகுப்பறைக்கு வந்து தூங்கவேண்டும் பிறகு மாலை வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

Subbiahpatturajan




*கல்விக் கடவுளான காமராஜரை ஏன் நாம் போற்றுகின்றோம்*

🙏🙏🙏🙏🙏🙏

*லாலு பிரசாத் யாதவ் ஒரு நேர்காணலில்* இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

*எங்கள் பெற்றோர் எங்களை பள்ளிக்கு அனுப்புவார்கள்*. 
*பள்ளி அசம்பிளியிலேயே அந்தந்த ஜாதி மாணவர்கள் பிரிக்கப்படுவார்கள்*. 
*யாதவ மாணவர்கள் ஆசிரியர்களின் வீட்டு மாடுகளை கவனிக்க அனுப்பப் படுவார்கள்*. 

நண்பகல் வகுப்பறைக்கு வந்து தூங்கவேண்டும் பிறகு மாலை வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்படித்தான் அந்த அந்த ஜாதி மாணவர்கள் அவரவர் குலத்தொழிலைச் செய்யவேண்டும். 


*இந்தியா எங்கும் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டோம்*. 

அப்போ தெல்லாம் ஆசிரியர் மேசையில் இருக்கும் 
புத்தகத்தை கையால்த் தொட்டாலே காது கிழிந்து விடும் அளவிற்கு திருகிவிடுவார்  ஆசிரியர்...என்று தன்னுடைய மாணவர் பருவ அனுபவத்தைக் கூறியுள்ளார் 
*லாலு_பிரசாத்*.

நாடோடிகளின் நிலை இதைவிடக் கொடூரம், என்.டி. டி.வி., என்ற செய்தி தொலைக்காட்சியில் பிகாரில் எலிபிடிக்கும் நாடோடிகளின் வாழ்க்கைப் பற்றி ரவீஷ் குமார் படம்பிடித்திருந்தார்.

சுதந்திரத்திற்கு முன்பு இந்த மக்கள் வயல்வெளிகளில் பயிர்களைச் சேதப்படுத்தும் எலிகளைப் பிடித்து அதற்கான கூலியை வாங்கிக்கொண்டு வாழ்க்கை நடத்தினர், கூலியாக நெல், கோதுமை, கடுகு, கடலை போன்றவை கிடைக்கும்.

ஆனால், ஆங்கிலேயர்கள் சென்ற பிறகு இவர்களின் வாழ்க்கையில் கொடூர மாற்றம் ஏற்பட்டது.

*இவர்கள்_வயலில் இறங்குவதால் வயல் தீட்டுப்படுகிறது* *என்று கூறி உயர்ஜாதியினர்* *இவர்களை ஊரைவிட்டுத் துரத்தினர்*. 

ஏதாவது *வேலைகொடுங்கள் என்று கெஞ்ச வேண்டிய நிலையில் மாடுகளுக்குப் பதிலாக இந்த மக்களில் ஆண், பெண் என்று பாராமல் #அவர்களின் கழுத்தில்_ஏர் பூட்டப்பட்டது*. 

*எல்லாவற்றையும் விடக்_கொடூரம்* *அவர்களுக்குக் கூலியாக சாணி* *கொடுக்கப்பட்டது* *ஆமாம் மாடுகளின் வயிற்றில் இருந்து செறிக்காமல்* வெளியே வந்த *கோதுமைகளை இவர்கள் கழுவி எடுத்துச் செல்லவேண்டும். அதுதான் அவர்களது உணவு*!

சுதன்மான்ஜி என்ற 80 வயது முதியவர் தன்னுடைய அனுபவத்தை பற்றிக் கூறும்போது: *அம்மா கூடை நிறைய சாணியை அள்ளி வருவார்கள் அதைக் கழுவினால் ஒரு கைப்பிடி கோதுமைகூட கிடைக்காது*. சில நேரங்களில் அந்தச் சாணிக் கூடையில் மனிதக் கழிவுகளும் கலந்திருக்கும் என்று தெரிவித்தார்.

இப்போது நினைத்துப்பாருங்கள்!

*தமிழ்நாட்டின் நிலையை*!

*காமராஜரின் பணியை...

அவர் இல்லாமல் இருந்திருந்தால்? 
அப்போது நமது நிலை இதுதான்...
பார்ப்பனர்களை பார்த்து...

*கும்பிடுறேன் சாமியோவ்தான்*...

*காமராஜரை நாம் போற்றவேண்டும் படித்ததில் பகிரத் தோன்றியது*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...